1745436 rusti1
உலகம்செய்திகள்

பிரபல எழுத்தாளர் மீது கத்திக்குத்து! – சந்தேக நபர் கைது

Share

1988ஆம் ஆண்டு, சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக மரண அச்சுறுத்தலில் இருந்து வந்த இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நடந்த மேடை நிகழ்வொன்றில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். சந்தேகநபர், மேடைக்கு சென்று, ருஷ்டியையும் அவரை நேர்காணல் செய்பவரையும் தாக்கியதாக நியூயார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது.

16603881812027

கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான அவர் இலக்காகி படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டி, ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிக இரத்த இழப்பை சந்தித்துள்ள அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்பதுடன் அவரது கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றும் அவரது கல்லீரல் குத்தப்பட்டு சேதமடைந்துள்ளது என அவரது பிரதிநிதியான ஆண்ட்ரூ வைலி தெரிவித்துள்ளார். எனினும் தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு வெளியிட்ட தி சடனிக் வர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 1988இல் வெளியிடப்பட்ட, இறைதூதர் நபி நாயகம் தொடர்பான சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய பிறகு பல ஆண்டுகளாக அவர் மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் ருஷ்டி 1981இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் மூலம் புகழ் பெற்றார், இங்கிலாந்தில் மட்டும் இந்த நாவலின் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.
எனினும் 1988இல் அவரது நான்காவது நாவலான – சாத்தானிக் வசனங்கள் – காரணமாக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த நாவல் சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது, அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை என்று கருதி, சில நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...