images 1
உலகம்செய்திகள்

கடும் வெப்பநிலை! – அரச ஊழியர்களுக்கு விடுமுறை

Share

ஈராக்கின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்ததை அடுத்து அரச ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல நகரங்களும் கடந்த வியாழக்கிழமை உலகின் அதிக வெப்பமான பகுதிகளாக பதிவாகின. சுட்டெரிக்கும் வெப்பம் காரணமான குறைந்தது 10 மாகாணங்களில் அரச ஊழியர்களுக்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் தொடக்கம் ஈராக்கில் வெப்ப அலை பாதிக்கப்பட்டிருப்பதோடு இந்தக் காலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எரிக்கும் வெப்பம் ஈராக்கில் அசாதாரணமானது இல்லை என்பதோடு அது உலகின் அதிக வெப்பமான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால் நிலைமை மோசமாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

தெற்கு துறைமுகமான பஸ்ராவில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு உச்சம் பெற்றிருக்கும் நிலையில் அங்கு அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...