உலகம்
பிலிப்பைன்ஸைப் புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த புயல்!
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் – மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் மற்றும் கன மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கு முன்னதாக சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களும் இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் கடலோர காவற்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
You must be logged in to post a comment Login