உலகம்
பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றொரு “எலிசபெத்”. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!
பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அந்தப் பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் அந்தப் பெண் குழந்தைக்கு “சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அச்சுடன் கூடிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப் பேத்தியான சியன்னா, அவரது தாய் பீட்ரைஸ்-க்கு பிறகு 11-வது இடத்தில் சிம்மாசனத்தில் உள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி - tamilnaadi.com