Ecuadorian prisone scaled
உலகம்செய்திகள்

2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Share

தென்னமெரிக்க ஈகுவடார் நாட்டின் சிறையில் உள்ள 2000 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

குயாஸ் மாகாணத்தில் துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாகி வெடித்தது.

அதில் இதுவரை 118 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 79 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 39 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாலும் கைதிகளை கண்காணிப்பதற்கு போதிய அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடாததே மோதல்கள் வன்முறையில் முடியக் காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக சிறையில் அடைபட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் என 2000 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கைதிகளை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து மோதலை தவிர்க்கலாம் என அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...