11 5
இந்தியாஉலகம்செய்திகள்

அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நாடு திரும்பினர்: அடுத்து என்ன?

Share

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் சற்று முன், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், சட்டவிரோத புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஏராளமானோர் நாடுகடத்தப்பட்டுவருகிறார்கள்.

அவ்வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெக்சாஸிலுள்ள சான் அண்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, சற்று முன் அமிர்தசரஸிலுள்ள ஸ்ரீ குரி ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் அந்த 104 பேரும், தத்தம் மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.

அவரவர் சார்ந்த மாநில அரசுகள், அவர்களை அவரவர் ஊர் கொண்டு சேர்ப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...