பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.
இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு நடாத்துதல், சாதாரண மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாவார்
மேலும் அவர்கள், வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Leave a comment