R 6
உலகம்செய்திகள்

பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட இந்தியர்கள் பயணித்த விமானம்: விசாரணை துவக்கம்

Share

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா தனியாக விசாரணைகளைத் துவங்கியுள்ளது.

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் நேற்று மும்பை திரும்பியது.

மீதமுள்ளவர்களில் சிலர் ஆட்கடத்தல் தொடர்பில் பிரான்சில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார்கள்.

அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.

அதாவது, இந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், Shashi Kiran Reddy என்னும் நபர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த Shashi Kiran Reddyதான், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நடந்தே நுழைய முயன்று குளிரில் உறைந்து பலியான ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...