உலகம்செய்திகள்

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் - சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!
தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் - சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!
Share

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!

தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். தாக்குதலாளியின் உடலும் சூட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1628839942291

நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களையும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடி
சுட்டுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

பாரம் தூக்கும் வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப்படும் அந்த இளைஞன், முதலில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு வெளியே வந்து வழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலி மூலம் மீட்கப்பட்டனர். நேற்றிரவு பொலீஸார் சம்பவம் நடந்தபகுதியை மூடி தேடுதல்களை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று மறுத்துள்ள அதிகாரிகள்,பிரதேச மக்களை அமைதி பேணுமாறு கேட்டுள்ளனர்.

தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கின்ற உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் (Priti Patel), பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

குமாரதாஸன்

பரிஸ்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...