Taliban Afghanistan 3
உலகம்

கொலைக்களமாகும் ஆப்கான்! – இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்!!

Share

கொலைக்களமாகும் ஆப்கான்! – இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் கைப்பற்றி வரும் பகுதிகளில் தலிபான்கள் தீவிரவாதிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் நேற்று கைப்பற்றி, அங்குள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்களை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து, அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தாங்கள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெண்களை தலிபான்கள் குழு கட்டாய திருமணம் செய்கின்றது என்று அமெரிக்க ஊடகமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறியுள்ளது என்று ANI செய்தி வெளியிட்டுள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், ‘திருமணமாகாத பெண்களை கட்டாயப்படுத்தி தங்கள் குழுவிலுள்ள ஆண்களுக்கு மனைவிகளாக கட்டாயப்படுத்தி மாற்றி வருகின்றன. இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவம் என்று மனித உரிமை குழுக்கள் கூறி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தலிபான்களால் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட அரசுப் படை வீரர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதுடன், அங்குள்ள பொதுமக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்கள் நடத்துகின்றன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அந்தப் பகுதிகளில் மக்கள் முன் தோன்றும் தலிபான்கள், நாட்டின் மிகப்பெரிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், ‘தலிபான்கள் வெற்றிபெற வேண்டும்’ என்று கோஷம் போட வைக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், சரணடைந்த ஆப்கானிஸ்தான் இராணுவ உறுப்பினர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ” இது போர்க்குற்றங்களை உருவாக்கும்” என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நகரங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள தலிபான்கள் முன்வர வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...