ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி
உலகம்செய்திகள்

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

Share

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் இரண்டாவது உயரமான சிகரமான, 14,867 அடி உயரமுடைய Weisshornஇல் ஏறும் முயற்சியின்போது, 1900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் Bernஐச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Stockhorn மலையிலிருந்து இறங்கும்போது, வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், 26 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 36 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் 3,450 மீற்றர் உயரமுடைய Aiguille du Tour என்னும் மலையில் ஏறும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த 22 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, சூரிச்சைச் சேர்ந்த 37 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் Lagginhorn என்னும் மலையில் 13,000 அடி உயரத்தை எட்டிய நிலையில், 200 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையில், சில நாட்களில் ஆறு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...