ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி
உலகம்செய்திகள்

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

Share

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் இரண்டாவது உயரமான சிகரமான, 14,867 அடி உயரமுடைய Weisshornஇல் ஏறும் முயற்சியின்போது, 1900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் Bernஐச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Stockhorn மலையிலிருந்து இறங்கும்போது, வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், 26 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 36 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் 3,450 மீற்றர் உயரமுடைய Aiguille du Tour என்னும் மலையில் ஏறும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த 22 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, சூரிச்சைச் சேர்ந்த 37 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் Lagginhorn என்னும் மலையில் 13,000 அடி உயரத்தை எட்டிய நிலையில், 200 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையில், சில நாட்களில் ஆறு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...