23 654f68c9b9c29
உலகம்செய்திகள்

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

Share

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

தமிழ்நாட்டை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்த்ததில்லை. அவர் ஐபிஎஸ் படித்திருக்கிறார். அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்றால், அண்ணாமலை களத்தூரில் தங்கியிருக்கும் போது வீட்டின் முன்பு கம்பம் நடுகிறார்கள்.

அதுவும், எந்தவித அனுமதியும் வாங்காமல் கம்பம் நடுகிறார்கள். நான் பார்த்ததை வைத்து தான் சொல்கிறேன். ஏன் அவர்கள் அதை அப்படி செய்கிறார்கள். கலவரம் பண்ண வேண்டும் என்றும், குதர்க்கம் பண்ண வேண்டும் என்றும் செய்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற அண்ணாமலை செயல்படுகிறார்.

குஜராத்திலும், புல்வாமாவிலும் எப்படி செய்தார்களோ ஆளுநர் மாளிகையிலும் அப்படி செய்கிறார்கள். இவர்களே ரவுடியை வெளியே கொண்டு வந்து வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு அப்படி வைக்கிறார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...