mannar2 e1636825183263
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் கரையொதுங்கியது பெண்ணின் சடலம்!!

Share

மன்னார் கடல்பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மன்னார் – பிரதான பாலத்துக்கு அண்மையிலுள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியிலேயே குறித்த சடலம் இன்று அதிகாலை இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றபோது, பெண்ணின் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலம் இனங்காணப்படாத நிலையில், குறித்த பகுதிக்கு சென்ற மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் பாலப்பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை மாலை பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக இடன்பெற்று வந்தது. இந்த நிலையில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

mannar2 1 e1636825268828

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...