202005290904027261 Clothing store in the deadly fire SECVPF
செய்திகள்இலங்கை

தீயில் எரிந்து பெண் பலி!!- கணவர் கைது

Share

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று காலை குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து புகை வெளிவருவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக ஓடிச்சென்று யன்னலூடாக அவதானித்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பப்பெண் தீயில் எரிந்துகொண்டிருந்தார். உடனடியாக விரைந்து செயற்பட்ட அயலவர்கள் கதவை உடைத்து தீயை அணைப்பதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்காத நிலையில் குறித்த பெண் சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் ராயகுலேந்திரன் அனித்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே சாவடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவரது வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனினும் அவரது 14 வயதான மகன் மலசலகூடத்துக்கு சென்றிருந்த நிலையில் மலசலகூடத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...