202005290904027261 Clothing store in the deadly fire SECVPF
செய்திகள்இலங்கை

தீயில் எரிந்து பெண் பலி!!- கணவர் கைது

Share

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று காலை குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து புகை வெளிவருவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக ஓடிச்சென்று யன்னலூடாக அவதானித்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பப்பெண் தீயில் எரிந்துகொண்டிருந்தார். உடனடியாக விரைந்து செயற்பட்ட அயலவர்கள் கதவை உடைத்து தீயை அணைப்பதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்காத நிலையில் குறித்த பெண் சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் ராயகுலேந்திரன் அனித்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே சாவடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவரது வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனினும் அவரது 14 வயதான மகன் மலசலகூடத்துக்கு சென்றிருந்த நிலையில் மலசலகூடத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...