death 1 1024x680 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மிஹிந்தலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்!!

Share

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இல்லுகன்னியா வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.எனவே, குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...