mano
செய்திகள்அரசியல்இலங்கை

‘அகலம் இன்னும் அதிகம்’ – மாவீரர் நினைவேந்தல் குறித்து மனோ!

Share

“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ள சென்ற சட்டத்தரணி சுபாஷ் தலைமையிலான குழுவினரை துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் இடைமறித்து அச்சுறுத்தினர். இந்த நிலையில் அங்கு சென்றவர்கள் அவர்கள் இடைமறித்த பகுதியிலேயே துப்பாக்கி முனைக்கு நேராக அவ்வித அச்சமுமின்றி மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

“ஆயுத போராட்டத்தை மீள ஆரம்பிக்க அல்ல என தெரிந்த நிலையிலும், இதே நினைவுகூரல் உரிமைகள் சிங்கள தெற்கிற்கு வழங்கப்பட்ட நிலையிலும், மரணித்தோரை நினைவுறுத்தும் உலகளாவிய உரிமை அடிப்படையில் நிகழும் நினைவுகூரல்களை சகித்துக்கொள்ள முடியாமை, இத்தனை காலம் கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...