sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சஜித்

Share

” நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 ஆம் நிலையியற்கட்டளையின்கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரிசிக்கு வரிசை, சீனிக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை, சமையல் எரிவாயுவுக்கு வரிசை என அந்தப்பட்டியல் நீள்கின்றது.

மாற்றத்துக்காகவே 69 லட்சம் பேர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? மீண்டும் 70-77 யுகத்தை நோக்கி மக்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.” -என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...