sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சஜித்

Share

” நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 ஆம் நிலையியற்கட்டளையின்கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரிசிக்கு வரிசை, சீனிக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை, சமையல் எரிவாயுவுக்கு வரிசை என அந்தப்பட்டியல் நீள்கின்றது.

மாற்றத்துக்காகவே 69 லட்சம் பேர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? மீண்டும் 70-77 யுகத்தை நோக்கி மக்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.” -என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...