இந்தியாவில் ஆடி மாதத்தில் இருந்து மொத்தம் 93 இலட்சம் பயனாளர்களின் கணக்குகளை வட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது.
கடந்த புரட்டாதி மாதத்தில் மட்டும் 22 இலட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை முடக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
அத்துடன், ‘ரிபோர்ட்’ வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின் படி, 50 இலட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் முறைப்பாடுகளைப் பெற்றது தொடர்பாகவும், அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
#india