moon
செய்திகள்இந்தியா

கார்த்திகை 19ல் நடக்கபோவதென்ன?

Share

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் கார்த்திகை 19ல் தென்பட போகிறது.

மிகப்பெரிய சந்திர கிரகணம் இம்மாதம் அதாவது கார்த்திகை 19ஆம் திகதி தென்படவுள்ளது.

அக்கிரகணம்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணமாகும்.

இது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படும்.

இந்த நிகழ்வு பெளர்ணமி நாளில் தான் ஏற்படுகின்றன.

சந்திரன் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் அது முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

கார்த்திகை 19ஆம் திகதியன்று 12:48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு கார்த்திகை 8ஆம் திகதி கண்களுக்கு தெரியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...