Brazilian president
செய்திகள்உலகம்

காற்பந்து போட்டியைப் பார்வையிடச் சென்ற பிரேசில் ஜனாதிபதிக்கு நடந்தது என்ன?

Share

பிரேசில் ஜனாதிபதிக்கு, காற்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, கொரோனா வைரஸைக் கட்டுப்படும் சுகாதார நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

அத்துடன் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும் அவர் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசிலில் நடந்த காற்பந்துப் போட்டியொன்றைப் பார்வையிடச் சென்ற அவருக்கு, மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் சா பாலோ நகரில் உள்நாட்டு காற்பந்துப் போட்டி இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் சா பாலோ நகரில் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்து வரும் அவர், அங்கு நடைபெற்ற காற்பந்து போட்டியைப் பார்பதற்காக அங்குள்ள மைதானத்திற்குச் சென்றார்.

ஆனால் மைதானத்தில் இருந்த அதிகாரிகள், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து அவர் அவ்விடத்திலிருந்து கோபத்துடன் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...