மதுபான பிரியர்களுக்கு ஆப்பு! – 1/4 போத்தலுக்கு தடை

Alcohol ban

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்குஅனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் , தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையால் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 72 சதவீதமானவர்கள் இந்த மதுபான கால் போத்தல் உற்பத்தி தடைக்கு ஆதரவாகவே கருத்து வெளியிட்டிருந்தனர். – என்றார்.

#SriLankaNews

Exit mobile version