66666 scaled
செய்திகள்இலங்கை

திருமண வைபவங்கள் கட்டுப்பாடுகளுடன்!

Share

திருமண வைபவங்களை தற்போதைய சட்ட கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் நடத்துவது குறித்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைமை காரியலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கொரோனாத் தொற்று பரவல் காரணமாக திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டலின் கீழ் குறைந்த பட்ச எண்ணிக்கையான விருந்தினர்களைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மதுபான விருந்தின்றி முழுமையான தடுப்பூசிகளை பெற்றவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதியளிக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை கொவிட் – 19 கட்டுப்பாட்டு தேசிய செயலணியிடம் முன்வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...