ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

தடைகளை கண்டு நாம் பின்வாங்க மாட்டோம்! – ரஞ்சித் மத்தும பண்டார

Share

” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொரோனாவால் நாட்டில் நாளாந்தம் 200 பேர் பலியானபோதுகூட கடும் கட்டுப்பாடுகளை அரசு உடன் விதிக்கவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே அரசு இப்படி செயற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் நடைபெறும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...