dinesh
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் எமக்கு தெரியாது ! – தினேஷ் குணவர்தன

Share

” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதீடுமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கை பொருளாதாரத்தின் இதயம்தான் மத்திய வங்கி. அந்த மத்திய வங்கியை கொள்ளையிட்ட முன்னாள் ஆளுநர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எமக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு (எதிரணி) தெரியும்.

மத்திய வங்கியை அழிக்கும்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள்தான் இன்று நிதி முகாமைத்துவம் பற்றி கதைக்கின்றனர்.” – எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் முதல் திறக்கப்படும் என்ற தகவலையும் குறித்த விவாதத்தின்போது கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...