20211105 110729 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள்! – செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன்

Share

எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் தனது காலத்திலாவது இதனை செய்ய வேண்டுமென

செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரியகுளத்தை திருத்துவதற்கு தற்போதைய மாநகர முதல்வர் முன்வந்தமை உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். ஆரியகுளம் யாருடைய குளம் என்பது தொடர்பாக தமிழர்களுக்கே சரியாக தெரியாது. இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்த ஆரியச் சக்கரவர்த்தி இங்கு வந்து ஆட்சி செய்த காலத்திலேயே ஆரியகுளம் உருவாக்கப்பட்டது.

ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழர்களென பேராசிரியர் பத்மநாதன் தெளிவுபடுத்துகிறார். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலேயே ஆரியகுளம் உருவாக்கப்பட்டது. இது சைவத் தமிழ் மன்னர்களுடையது எனக் கூறுங்கள்.

மதங்களை கடந்து போகிறோம் என்று சொல்லி எங்களை பொதுவானவர்கள் என்று கூறாதீர்கள். இத்தகைய குளங்கள் அருகிலேயே கல்வெட்டுகளை பதியுங்கள். யாழ். மாநகரசபை இதனைச் செய்ய வேண்டும்.

எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் தனது காலத்திலாவது இதனை செய்ய வேண்டும். இதற்கு பணம் இல்லாவிட்டால் சைவ அமைப்புக்களான எங்களிடம் கேளுங்கள். நாங்கள் செய்வோம். வரலாற்றை ஆவணப்படுத்த தவறிய காரணத்தால் வரலாற்றாசிரியர்களும் சமாளித்துச் செல்லவே பார்க்கின்றனர்.

நாவலர் மண்டபத்தில் கடந்த காலத்தில் ஆய்வரங்குகளும் இந்து கலாசார திணைக்களத்தின் நிகழ்வுகளும் நடந்தன. ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

எமது இனத்திற்காகவும் சமூகத்துக்காகவும் பாடுபட்ட நாவலரின் இடத்தை எவ்வாறு வைத்திருக்கிறோம். இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். பாராமரிக்க முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...