10a4fce8 anura
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம் – அநுரகுமார திஸாநாயக்க

Share

இந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக வழியில் மக்கள் வீதிக்கு இறங்கினால் அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசியமானதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம். எனவே, மக்கள் புரட்சிக்கும், புதிய ஆட்சிக்கும் தலையேற்க தயாராகவே இருக்கின்றோம் எனவும் அநுரகுமார கூறியுள்ளார்.

” நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே காரணம். அவர்களின் தவறான கொள்கைகளாலேயே நாடு கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இந்நிலைமைக்கு கடந்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.

புரட்சிமூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். அது ஜனநாயக வழியிலான அரசியல் புரட்சியாக அமைய வேண்டும். இதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு வேண்டும்.” – என்றார்.

#Srilankanews

Share
தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...