Dinesh Gunawardena
செய்திகள்அரசியல்இலங்கை

சமஸ்டிக்கு உடன்படோம்! – தினேஷ் குணவர்த்தன

Share

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்துக்கு அரசு ஒருபோதும் உடன்படாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் ஏன் பேசுவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்திய தலையீட்டை கோரி தமிழ் தேசிய கட்சிகள் இந்திய பிரதமருக்கு அனுப்ப உள்ள ஆவணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வரலாறு முழுவதும் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தன. அதாவது இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் இந்த விடயங்கள் குறித்து பேசுகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு ஏன் ஏன் இலங்கையில் இருக்கின்ற நாடாளுமன்ற மற்றும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முடியாது என்பதே எமது கேள்வியாக இருக்கின்றது.

தற்போது அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த அறிக்கைக்காக நாம் காத்திருக்கின்றோம். அரசியல் இருப்புக்காகவே தமிழக்கட்சிகள் இவ்வாறு செயற்படுகின்றன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...