25 68fda926d05f6
செய்திகள்இலங்கை

வெலிகம தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்

Share

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளன.

காலை 11 மணிக்கு அவரது உடல் வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மிதிகமவில் உள்ள குடும்ப மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். கடந்த புதன்கிழமை அவர் தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசாரணை வெற்றிகரமாக நடப்பதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவருக்கு உதவிய நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென் மாகாண பொறுப்புடைய மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத்தின் கீழ் உள்ள பொலிஸ் குழுக்கள், சிசிடிவி மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.

சிசிடிவி காட்சிகளில் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால் உரிமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தென் மாகாணத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக நேற்று தென் மாகாணம் முழுவதும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதிச் சடங்கில் அரசியல்வாதிகள் உட்படப் பலர் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...