படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளன.
காலை 11 மணிக்கு அவரது உடல் வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மிதிகமவில் உள்ள குடும்ப மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். கடந்த புதன்கிழமை அவர் தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசாரணை வெற்றிகரமாக நடப்பதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவருக்கு உதவிய நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் மாகாண பொறுப்புடைய மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத்தின் கீழ் உள்ள பொலிஸ் குழுக்கள், சிசிடிவி மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
சிசிடிவி காட்சிகளில் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால் உரிமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தென் மாகாணத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக நேற்று தென் மாகாணம் முழுவதும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிச் சடங்கில் அரசியல்வாதிகள் உட்படப் பலர் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.