விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த அரசை உருவாக்குவதற்கு பாடுபட்டவர்கள் – என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
விமல் வீரவன்ச அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் வகித்த கைத்தொழில் அமைச்சே எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
அதேவேளை, என்றாவது ஒருநாள் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்பது தெரியும் எனவும், தாமதித்தேனும் கிடைத்தமை மகிழ்ச்சி எனவும் அமைச்சர் எஸ்.பி. குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment