you
செய்திகள்உலகம்

வீடியோக்கள் நீக்கப்படும் – ‘YouTube’ எச்சரிக்கை!

Share

வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களுடன் கூடிய மருத்துவ கொள்கைகளை யூரீப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதற்கமைவாக கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பூசி கொள்கைகளை மீறியதற்காக 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டவுள்ளன.

இக் கொள்கைக்கமைவாக புதிய தடுப்பூசி சோதனைகள், தடுப்பூசியின் வெற்றிகள், தோல்விகள், தடுப்பூசிகள் குறித்த பொது விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டு இருக்கும் வீடியோக்கள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் இந் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை, நாள்பட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என பொய்யான வதந்திகளை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து மட்டுமல்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்த தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளை பரப்பும் பட்சத்தில் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...

world 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருமேனிய வேலைவாய்ப்பு மோசடி: SLPP முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி கைது!

ருமேனியாவின் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி 21.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை...

world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரி நிதி மோசடி: நாடாளுமன்றக் குழு கடமையிலிருந்து தவறிவிட்டது – ரஜித் கீர்த்தி தென்னக்கோன் காட்டம்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான...