vehicle
செய்திகள்இலங்கை

வாகனங்களின் விலை குறையாது!

Share

அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் தற்போது அதிகரித்து காணப்படும் விலை குறையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

அரசாங்கம் வாகன இறக்குமதியை தற்போது நிறுத்தியுள்ளமையால் கார் விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை ஏறும் என்ற கோட்பாடு ஏற்கனவே வாகனங்களை பாதித்துள்ளது. ரூபா மதிப்பு குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என்பன வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்தமைக்கான காரணமாகும். ஆனால் இதிலிருந்து வெளிவர நீண்ட காலம் பிடிக்கும் எடுக்கும்.

அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகனங்களின் இறக்குமதியை நிறுத்தியதிலிருந்து, கார் விற்பனையாளர்கள் வங்கிக் கடன்கள் மற்றும் பிற செலவுகளை வணிகங்களுக்கான மூலதன நிதியில் ஈடுசெய்கின்றனர். இதனால் இத்துறையில் தொழில் புரிந்த பலர் வேலைகளை இழந்துள்ளனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயன்படுத்திய ஜப்பானிய வாகனங்கள் அனைத்தும் இப்போது இருப்பது போல் ஒவ்வொன்றாக உயர்ந்து இந்திய வாகனங்கள் சில இலட்சங்கள் உயர்ந்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...