vehicle
செய்திகள்இலங்கை

வாகனங்களின் விலை குறையாது!

Share

அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் தற்போது அதிகரித்து காணப்படும் விலை குறையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

அரசாங்கம் வாகன இறக்குமதியை தற்போது நிறுத்தியுள்ளமையால் கார் விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை ஏறும் என்ற கோட்பாடு ஏற்கனவே வாகனங்களை பாதித்துள்ளது. ரூபா மதிப்பு குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என்பன வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்தமைக்கான காரணமாகும். ஆனால் இதிலிருந்து வெளிவர நீண்ட காலம் பிடிக்கும் எடுக்கும்.

அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகனங்களின் இறக்குமதியை நிறுத்தியதிலிருந்து, கார் விற்பனையாளர்கள் வங்கிக் கடன்கள் மற்றும் பிற செலவுகளை வணிகங்களுக்கான மூலதன நிதியில் ஈடுசெய்கின்றனர். இதனால் இத்துறையில் தொழில் புரிந்த பலர் வேலைகளை இழந்துள்ளனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயன்படுத்திய ஜப்பானிய வாகனங்கள் அனைத்தும் இப்போது இருப்பது போல் ஒவ்வொன்றாக உயர்ந்து இந்திய வாகனங்கள் சில இலட்சங்கள் உயர்ந்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...