WhatsApp Image 2021 09 02 at 13.07.16
செய்திகள்இலங்கை

மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்!

Share

மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரின் வருகையை கண்டவுடன் விற்பனைசெய்த மரக்கறிகளையும் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவன் அம்மன் வீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில். காலை வேளையில் மரக்கறி வியாபாரிகள் அவ்விடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

அவ்விடத்தில் சனக்கூட்டம் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸார் ஏற்கனவே அவ்விடத்தில் மரக்கறி வியாபாரம் செய்ய தடைவிதித்திருந்தனர். அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டோரை விரட்டியபோதிலும் தொடர்ச்சியாக பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர்.

இன்றைய தினம் காலை வேளையில் கோப்பாய் பொலிஸாரின் வாகனம் அவ்விடத்துக்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தமது வியாபார பொருள்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பொலிஸார் திரும்பி சென்ற பின்னர், குறித்த இடத்துக்கு திரும்பிவந்து தமது மரக்கறி பொருள்களை எடுத்து சென்றுள்ளனர்.

நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...