வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில் சிறந்த ஆய்வு நூலிற்கான பரிசை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சின்னராசா ரமணராஜா பெற்றுக்கொண்டார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இவர் எழுதிய ” யாழ்ப்பாணத்தில் வீரசைவம்: வரலாறும் பண்பாடும்” எனும் நூலுக்கே சிறந்த ஆய்வுக்கான நூற்பரிசினை பெற்றுள்ளார்.
சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனான இவர், சிறந்த சொற்பொழிவாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமாவார்.
#SriLankaNews
Leave a comment