ஆ.கேதீஸ்வரன்E
செய்திகள்இலங்கை

வடக்கில் 12–19 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி

Share

வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும்.

இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக,

விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 –19 வயதினருக்கு கடந்த 24 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சின் அடுத்த கட்டமாக, ஒக்ரோபர் 1 முதல் நாடு முழுவதும் உள்ள விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12–19 வயதினருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு்ளளது.

அதன்படி இன்று வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தத் தடுப்பூசியானது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய,]

குழந்தை நல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமையவே வழங்கப்படும்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில்,

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...