178818 vaccine
செய்திகள்இலங்கை

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில்!

Share

மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் – என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் 10 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 5 பேர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,4 பேர் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 52 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஒரு நாளைக்கு 9 தொடக்கம் 15 கொரோனாத் தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 7 ஆக குறைவடைந்துள்ளது.

தற்போது நூறு பி.சி.ஆர் அல்லது அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது சுமார் 5 கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 23 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. இவற்றில் ஆகக்கூடிய மரணம் ஓகஸ்ட் மாதம் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் 10 கொரோனாத் தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 85 ஆயிரத்து 369 நபர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். 2வது தடுப்பூசியை 63 ஆயிரத்து 222 நபர்கள் பெற்றுள்ளனர்.

19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 18,17,16,15 என்ற வயது அடிப்படையில் குறித்த தடுப்பூசி வழங்கப்படும். இவர்களுக்கு ஒரு பைஸர் தடுப்பூசியே வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் வாரம் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...