25 6905a46f6b0f0 md
செய்திகள்உலகம்

நைஜர் பயணம் தவிர்க்கவும்: பாதுகாப்பு நிலைமை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா கடும் எச்சரிக்கை!

Share

நைஜரில் நிலவும் மோசமான பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு அந்நாட்டிற்குப் பயணிப்பதைத் முற்றிலுமாகத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்த எச்சரிக்கை தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நைஜரில் உள்ள தமது தூதரகத்தின் மூலம் ஆதரவைப் பெற முடியாது என்றும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நைஜரை “அதிக அபாயம் உள்ள நாடு” (High-Risk Country) என வகைப்படுத்தியுள்ளன.

இந்த நாடுகள் தமது குடிமக்களை அவசர தேவையின்றி நைஜருக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

நைஜரில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளின் பின்னணியில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...