Pinnawala 01
இலங்கைசெய்திகள்

பார்வையாளர்கள் வருகையில் சரிவு: ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலையை மக்கள் புறக்கணிப்பு!

Share

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருகை தந்த போதிலும், இலங்கையின் ஒரே சஃபாரி பூங்காவான ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பின்னவல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றுக்கான பார்வையாளர் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு 1,023,091 பார்வையாளர்கள், பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு 650,013 பார்வையாளர்கள் வருகை தந்துள்ள போதும், ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு 209,500 பார்வையாளர்கள், பின்னவல மிருகக்காட்சி சாலைக்கு 302,627 பார்வையாளர்கள் மாத்திரமே வருகைத் தந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றுக்கு பார்வையாளர்கள் வருகை குறைவதற்கு விலங்குகளின் வரையறுக்கப்பட்ட வகைப்பாடு, கவர்ச்சிகரமான சூழல் இல்லாமை, போதுமான விளம்பரம் இல்லாமை என்பன காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சிறுத்தை மற்றும் சீத்தா வலயங்களின் கட்டுமானங்கள் தடைப்பட்டுள்ளன.

இது பூங்காவின் கவர்ச்சியைத் தடுத்தது. சிறுத்தை வலயம் 2024 ஆம் ஆண்டின் செயல் திட்டத்திலும், சீத்தா வலயம் 2025 இலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரிதியகம சஃபாரி பூங்காவின் மொத்த 500 ஏக்கர் பரப்பளவில் 150 ஏக்கர் பூங்கா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதற்கு 2020-2022 ஆம் ஆண்டுக்கிடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாகவே கட்டுமான தாமதம் ஏற்பட்டது.

தற்போது திட்டப்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவருகிறது மேலும் விலங்குகளைப் பெறுவதற்கும், பூங்காக்களின் சூழல் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்க முடியும் என கணக்காய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...