Malaiyagam
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

200 வருடங்களாக காணி உரிமையின்றி வாழும் மலையக மக்கள்!

Share

200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காடாக இருந்த மலைநாட்டை மலையக மக்கள் வளமாக்கினர். இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தனர். 200 வருடங்களாக உழைப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுவும் பின்னிலையிலேயே இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...