uni scaled
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுகின்றது! – வெளியானது விசேட அறிவிப்பு

Share

நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மீண்டும் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, 2020 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...