12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

Share

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜனித் மதுசங்க டி சில்வா என்ற ‘பொடி லெசி’யை (Bodi Lassie) 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், பிற்பகல் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் (Baddegama Magistrate Court) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு முதல் பொடி லெசி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன

அவற்றில் 5 கொலை வழக்குகள் 13 கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் 8 குற்றங்களைத் திட்டமிட்டு உதவி செய்தமை உள்ளிட்டவை அடங்கும்.

பலப்பிட்டிய நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்த ‘பொடி லெசி’, 2025 ஜனவரி 16 அன்று இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபரின் விசேட கோரிக்கையின் பேரில், இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...