MediaFile 4 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவர் விளக்கமறியலில்!

Share

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோர், பிரதான கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதி வழங்கியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கடந்த 90 நாட்களாகத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) இன்று (07) குறித்த இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது, சந்தேகநபர்களின் விசாரணைகளை முன்னிலைப்படுத்திய நீதவான், அவர்களை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கு பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...