MediaFile 3 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக பேராசிரியர் சரித ஹேரத் நியமனம்!

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்குழு உறுப்பினராக (Working Committee Member) பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்ட பேராசிரியர் சரித ஹேரத், அக்கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார்.

கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் இந்த நியமனத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன.

பேராசிரியர் சரித ஹேரத்தின் அரசியல் அனுபவம் மற்றும் கல்விப் புலமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த விசேட நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் எதிர்காலக் கொள்கை வகுப்பிலும், அரசியல் நகர்வுகளிலும் சரித ஹேரத் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...