26 69698bd01b247
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: மோட்டார் சைக்கிள், சூட்கேஸை கைவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம்!

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி திக்கம் பகுதியில் பயணப் பொதி (Suitcase) ஒன்றில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற இரு இளைஞர்கள், காவல்துறையினரைக் கண்டதும் வாகனத்தையும் கஞ்சாவையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

வடமராட்சி திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாகப் பருத்தித்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்துத் திடீர்ச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளைக் காவல்துறையினர் மறித்தபோது, அதில் பயணித்த இரு இளைஞர்களும் காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்கத் தமது மோட்டார் சைக்கிளையும், கொண்டு வந்த பயணப் பொதியையும் அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர்.

காவல்துறையினர் அந்தப் பயணப் பொதியைச் சோதனையிட்டபோது துணிகளுக்கு அடியில் சூட்சுமமாகப் பொதி செய்யப்பட்ட நிலையில் 12 கிலோ கேரளா கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பருத்தித்துறை காவல்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை வடமராட்சி காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...