செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்: 2025-இல் மட்டும் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

Share

யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின் போது இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன:

2025-ஆம் ஆண்டு கைதுகள்: ஹெரோயின், ஐஸ் (Ice), கஞ்சா மற்றும் ‘குஷ்’ போன்ற உயிர்கொல்லிப் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையுடன் தொடர்புடைய 7,040 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் வலயம்: 2024-இல் 2,450 ஆக இருந்த கைதுகள், 2025-இல் 4,380 ஆக உயர்ந்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் வலயம்: 2024-இல் 1,614 ஆக இருந்த கைதுகள், 2025-இல் 2,654 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் யாழ். மாவட்டத்தில் மொத்தம் 14,786 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கையே காட்டுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த பிரதேச மட்டக் குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...