Lady
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள்!!

Share

மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம். அட்டை தவறிவிட்டதாகவும், அதில் இருந்து சுமார் 130,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய களுத்துறை வடக்கு , விலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த இவர் ஏ டி எம் அட்டை தரையில் விழுந்து கிடந்த நிலையில் தான் எடுத்ததாக விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.

மேலும் உணவு, பானங்கள் வாங்குவதற்காக அவரது கணவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பொலிஸாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் யாசகம் பெற்றாலும் 20,000 ரூபா வாடகைக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...