கேகாலையில் மண்சரிவில் சிக்கிய இருவர் சடலமாக மீட்பு!

Kekalai

கேகாலையில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன, தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் வீடொன்று சிக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.

இந்தநிலையில் தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தாய் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version