கஞ்சா
செய்திகள்இலங்கை

கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

Share

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட படகை சோதனைசெய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கஞ்சா அடங்கிய பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.

எனினும் கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருள்களை மீட்டதோடு, படகில் இருந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...