கஞ்சா
செய்திகள்இலங்கை

கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

Share

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட படகை சோதனைசெய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கஞ்சா அடங்கிய பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.

எனினும் கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருள்களை மீட்டதோடு, படகில் இருந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...