202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

Share

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான திலிபன ஜெயசூரிய மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமான பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணியாளரான இந்திக பண்டார விஜேசுந்தர ஆகியோரே கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபையில் தொழிலாளர் பதவியைப் பெறுவதற்காக சந்தேக நபர்கள் ஐந்து இலட்சம் ரூபாயை கோரியதாகவும், முன்னதாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், தொழில் கிடைத்ததும் 2 இலட்சம் ரூபாயை கோரியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...

25 68fb58c78e11e
செய்திகள்இலங்கை

மோசமான பராமரிப்பு: இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து திரும்பப் பெறுகிறது!

இலங்கை அரசாங்கத்திற்குக் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து அரசு திருப்பிப் பெறத் திட்டமிட்டுள்ளது....