j3sm366eoiytn6ro 1643259040
இந்தியாசெய்திகள்

டுவிட்டர் என்னை பழிவாங்குகிறது – குமுறும் ராகுல்காந்தி!!

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கு ஆதரவாக டுவிட்டர் நிறுவனம் செயற்படுகிறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னைப் பின் தொடர்பவர்களை டுவிட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

சமூகவலைதளமான டுவிட்டர் பக்கத்தில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 இலட்சம் என இருந்தது.

ஆனால் கடந்த 2021 ஓகஸ்ட் மாதம் முதல் 2,500 என்ற எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது . என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக மாற்றங்கள் ஏதுமின்றி காணப்படுகின்றன.

டெல்லியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பப் புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து, இவ்வாறான பிரச்சினைகள் மேலோங்கியுள்ளன.

வேளாண் சட்டம் குறித்து பதிவிட்ட காணொளியானது அதிக பார்வைகளைப் பெற்றிருந்த நிலையில், அக்கணொளியானது நீக்கப்பட்டது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டுவிட்டர் தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஒருபோதும் டுவிட்டர் தளம் தன்னிச்சையாக செயற்படாது .

பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரண விடயம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி எழுதிய கடிதத்திற்கு டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...